சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை நிலானி கணவரால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவர் தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்தபோதுதான் லலித்குமார் என்பவர் அறிமுகமானார். முதலில் லலிதகுமாருடன் நட்புமுறையில் பழகிய நிலானி பின்னர் அவர் தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியவுடன் அவரிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே நிலானிக்கு லலிதகுமார் தொல்லை கொடுக்க இதுகுறித்து கடந்த வாரம் நிலானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் லலிதகுமாரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் லலிதகுமார் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நிலானி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும் தன்னுடைய தரப்பு நியாயத்தையும் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன் கண்ணீருடன் கூறினார். மேலும் லலித்குமார் தற்கொலைக்கு தான் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

More News

பஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்

பிக்பாஸ் வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய ஐந்து பெண்களும் ஒரே ஆண் போட்டியாளராகிய பாலாஜியும் உள்ளனர்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தயாரிப்பாளர் தாணுவின் தாராள உதவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் கூட்டமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது

சூர்யாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே. என்ற படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்திலும் நடித்து வரும் நிலையில்

கள்ளம் கபடமில்லாத ஸ்மைல்: ஐஸூக்கு ஐஸ் வைத்த ரித்விகா

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடன் சண்டை போட்டு எல்லோரையும் பகைத்து கொண்டவர் என்றால் அவர் ஐஸ்வர்யாதான்.

மும்தாஜ் ஆர்மியின் கூட்டம்: சிறப்பு விருந்தினர்கள் வருகை

பிக்பாஸ் 1 சீசனில் ஓவியாவுக்கு மட்டுமே சமூக இணையதளத்தில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. வேறு ஒருசிலருக்கு ஆர்மி இருந்தாலும் ஓவியா ஆர்மி போல் பிரபலம் ஆகவில்லை.