close
Choose your channels

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு

Thursday, September 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை நிலானி கணவரால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவர் தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்தபோதுதான் லலித்குமார் என்பவர் அறிமுகமானார். முதலில் லலிதகுமாருடன் நட்புமுறையில் பழகிய நிலானி பின்னர் அவர் தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியவுடன் அவரிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே நிலானிக்கு லலிதகுமார் தொல்லை கொடுக்க இதுகுறித்து கடந்த வாரம் நிலானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் லலிதகுமாரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் லலிதகுமார் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நிலானி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும் தன்னுடைய தரப்பு நியாயத்தையும் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன் கண்ணீருடன் கூறினார். மேலும் லலித்குமார் தற்கொலைக்கு தான் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.