சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் கல்வீச்சு: 2 பேர் கைது

  • IndiaGlitz, [Wednesday,April 27 2022]

சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இவரது வீட்டின் மேல் திடீரென 2 மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை வளைத்துப் பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் யாருடைய வீடு என்று தெரியாமலேயே கல் எரிந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஐபிஎல் அணிகளின் பட்டியல்: சிஎஸ்கேவுக்கு முதலிடம், மும்பைக்கு இரண்டாமிடம்!

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் சிஎஸ்கே அணியும் 10வது இடத்தில் மும்பை அணியும் இருக்கும் நிலையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும்

38 வயது ஆசிரியையை திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால் 35 வயது ஆசிரியையை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று கோடிகளில் புரளும் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்றும் அவர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

3 சம்மன்களுக்கு ஆஜராகாத இளையராஜாவுக்கு இறுதி நோட்டீஸ்: ஜிஎஸ்டி ஆணையம் அதிரடி

இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை!

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட தொகையை கொடுக்க முடியாததால் மகனின் உடலை இரு சக்கர வாகனத்தில் தோளில் சுமந்து சென்ற ஏழை தந்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.