close
Choose your channels

சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் கல்வீச்சு: 2 பேர் கைது

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இவரது வீட்டின் மேல் திடீரென 2 மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை வளைத்துப் பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் யாருடைய வீடு என்று தெரியாமலேயே கல் எரிந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.