புதையலுக்கு ஆசைப்பட்டு பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க துணிந்த சம்பவம்…

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

 

அசாம் மாநிலத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு, பெற்ற பிள்ளைகளையே பலி கொடுக்க துணிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்ட 2 சகோதரர்கள் இந்த துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். கவுகாத்தி மாவட்டத்தில் திமோவ்முக் எனும் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் ஜமியூர் உசைன், சரிபுல் உசைன். இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.

உசைன் சகோதரர்களின் வீட்டில் இருக்கும் மாமரத்திற்கு அடியில் புதையல் இருப்பதாக பெஜ் எனும் மந்திரவாதி கூறியுள்ளார். அந்தப் புதையலை எடுக்க வேண்டும் என்றால் பெற்ற பிள்ளைகளை பலி கொடுத்தாக வேண்டும் என்றும் சகோதரர்களுக்கு அவர் ஆலோசனை கொடுத்து உள்ளார். இந்நிலையில் இருவரும் தங்களது குழந்தைகள் மற்றும் மனைவியை பலிக் கொடுப்பதற்காக வீட்டில் பல நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்.

இவர்களின் மர்ம நடவடிக்கையை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதனால் உசைன் சகோதரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பணத்தின் மீது ஆசைப்பட்ட சகோதரர்கள் பெற்ற பிள்ளைகளையே பலி கொடுக்க துணிந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!

நடிகை கெளதமி வீட்டில் திடீரென இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுவரேறி குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தெருவில் பிச்சை எடுத்த என்கவுண்டர் போலீஸ் அதிகாரி… அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெருவில் பிச்சைக்காரர் போல பிச்சை எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

குழாயடி சண்டையில் இறங்கிய அர்ச்சனா-நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து 45 மணி நேரம் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் இன்றும் நாளையும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும்,

மீண்டும் இணையும் சூர்யா-கவுதம் மேனன்: இன்று முதல் படப்பிடிப்பு!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 'காக்க காக்'க மற்றும் 'வாரணம் ஆயிரம்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் இரண்டுமே மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே

ஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் புது விதிமுறை! இது லீக் போட்டிகளின் தலைவிதியை மாற்றுமா???

ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் (டி20) போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை அதன் பிபிஎல் நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.