close
Choose your channels

சென்னை செய்தியாளர்கள் இருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட உடன் பணிபுரிந்தவர்கள்!

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும் என ஒரே நாளில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் 24 வயது பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வசித்துவந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அவருடன் தங்கியிருந்த மூன்று பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளர்கள் ஆக பணிபுரிந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.

அதேபோல் ராயபுரத்தில் தங்கியிருந்த தனியார் தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஒருவருக்கும் இன்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அவரது தந்தை காவல்நிலையத்தில் பணிபுரிவதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பணிபுரியும் தனியார் தொலைக்காட்சி பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos