சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தில் இந்த இரண்டு பிரபல நடிகைகளா?

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அரண்மனை 4’ என்ற திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுந்தர சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ மற்றும் ’அரண்மனை 3’ ஆகிய மூன்று படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் நான்காவது பாகம் விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாகவும் அதன் பின்னர் அவர் திடீரென விலகி விட்டதை அடுத்து இந்த படத்தின் நாயகனாக சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 'அரண்மனை 4’ திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் இணைந்துள்ளதாகவும் இருவருக்குமே சம அளவிலான கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தில் தமன்னா ஏற்கனவே நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 3’ திரைப்படத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள நிலையில் தற்போது ’அரண்மனை 4’ படத்திலும் அவர் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் தங்கையாக பிரபல நடிகரின் மனைவி நடிக்கின்றாரா?  25 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருக்கும் அடுத்த திரைப்படமான 'லால் சலாம்' திரைப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி நடிக்க இருப்பதாகவும், 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில்

ஷாலினி அஜித், ஆத்விக் உடன் பாலிவுட் பிரபலத்தின் எதிர்பாராத சந்திப்பு.. க்யூட் வீடியோ..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகிய இருவரையும் பாலிவுட் பிரபலம் ஒருவர் எதிர்பாராமல் சந்தித்த க்யூட் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

புதிய படப்பிடிப்பில் மணிமேகலை.. இதற்குதான் 'குக் வித் கோமாளி'யில் இருந்து விலகினாரா?

சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்த நிலையில் தற்போது அவர் புதிய படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள

விஷாலின்  'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது.

'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட மாட்டோம்: நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.