close
Choose your channels

சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தில் இந்த இரண்டு பிரபல நடிகைகளா?

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அரண்மனை 4’ என்ற திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுந்தர சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ மற்றும் ’அரண்மனை 3’ ஆகிய மூன்று படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் நான்காவது பாகம் விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாகவும் அதன் பின்னர் அவர் திடீரென விலகி விட்டதை அடுத்து இந்த படத்தின் நாயகனாக சுந்தர் சி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 'அரண்மனை 4’ திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் இணைந்துள்ளதாகவும் இருவருக்குமே சம அளவிலான கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தில் தமன்னா ஏற்கனவே நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 3’ திரைப்படத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள நிலையில் தற்போது ’அரண்மனை 4’ படத்திலும் அவர் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.