ஆன்லைன் வகுப்பால் அடுத்தடுத்து பலியான இரண்டு உயிர்கள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக அடுத்தடுத்து ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டுநன்னாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கல்லூரியிலும் ஒரு மகள் பன்னிரெண்டாம் வகுப்பும் இன்னொரு மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர்களது வீட்டில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் மூத்த மகள் மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் பாடங்களை படித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மற்ற இரண்டு மகள்களும் சண்டை போட்டதால் மூவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மூத்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள ஒரு மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி அருகே கரட்டிப்பட்டியில் என்ற பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவர் விக்கிரபாண்டி, ஆன்லைன் வகுப்பு புரியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக அடுத்தடுத்து ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

More News

ஒரே குடும்பத்தில் 32 பேருக்குக் கொரோனா!!! பரபரப்பு தகவல்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஓடிடியில் ரிலீஸாகும் 'மாஸ்டர்' நடிகரின் அடுத்த படம்: பரபரப்பு தகவல் 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்: நாயகி, இயக்குனர் குறித்த தகவல் 

கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி, 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன.

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் சுந்தர் சியின் அடுத்த படமா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'ஆக்சன்' திரைப்படம் வெளியானது