close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உதயநிதி கொடுத்த உத்தரவாதம்!

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அவர்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

உதயநிதி பேசியதாவது: பாகுபலி சாதனையை கண்டிப்பாக ’ஆர்.ஆர்.ஆர்’ முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், கடந்த 10 வருடங்களுக்கு முன் நாங்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆரம்பித்தபோது ராஜமௌலி இயக்கிய ’மகதீரா’ படத்தின் தமிழ்ப்பதிப்பான ‘மாவீரன்’ படத்தை நாங்கள் தான் ரிலீஸ் செய்தோம் என்றும், அப்போது அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் என்றும், சத்யம் தியேட்டரில் ஒரு ஸ்கிரீனிலாவது எங்கள் படம் ரிலீஸாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்றும், அதேபோல் ‘மாவீரன்’ படத்தை சத்யம் திரையரங்கில் ரிலீஸ் செய்தோம் என்றும் கூறினார்.

இந்த முறை எங்களது ரெட் ஜெயன்ட் மூவிஸ் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் 3 ஏரியாக்களை வாங்கியுள்ள நிலையில் சத்யம் தியேட்டரில் உள்ள ஆறு ஸ்க்ரீனில் ஐந்து ஸ்க்ரீன்களில் இந்த படம்தான் போடுவோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.