கவுசல்யா தந்தை உள்பட 4 பேர்களுக்கு தூக்குதண்டனை: முழுவிபரம்

  • IndiaGlitz, [Tuesday,December 12 2017]

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு 302வது பிரிவின்படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னச்சாமியின் நண்பர் ஜெகதீசனுக்கும் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெகதீசன் கூலிப்படையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன், செல்வகுமார் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது

அதே நேரத்தில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவருடைய அரசியல் பார்வையும்...

இன்றைய தமிழகம் ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. ஆளுமை அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவும்,....

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உள்பட 11 பேர் குற்றவாளி. பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளி

செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட பிரபல காமெடி நடிகர்

தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய்சாய் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தகவல் பரிமாற்றங்களுக்காக சரத்குமார் வெளியிட்ட செயலி

சமீபத்தில் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் தங்களுடைய செயலிகளை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் அவர்களும் ASK என்னும் செயலியை வெளியிட்டுள்ளார்

பொன்வண்ணன் ராஜினாமா எதிரொலி: நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை

விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது