close
Choose your channels

கவுசல்யா தந்தை உள்பட 4 பேர்களுக்கு தூக்குதண்டனை: முழுவிபரம்

Tuesday, December 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிக்கு 302வது பிரிவின்படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னச்சாமியின் நண்பர் ஜெகதீசனுக்கும் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெகதீசன் கூலிப்படையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன், செல்வகுமார் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது

அதே நேரத்தில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.