close
Choose your channels

சிறை கைதிகளைத் திடீரென விடுவிக்கும் உக்ரைன் அதிபர்… என்ன காரணம்?

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போர் அனுபவம் கொண்ட உக்ரைன் நாட்டு சிறைகைதிகள் தற்போது நடந்துவரும் போரில் கலந்துகொண்டு ரஷ்யாவிற்கு எதிராகப் போராட விரும்பினால் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே குறைந்த ஆயுதப்படைகளை மட்டுமே கொண்டிருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு 18 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கி ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போராடும்படி அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் பலரும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராட விரும்பும் போர் அனுபவம் கொண்ட சிறை கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று ஜெலன்ஸ்கி அறிவித்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறைகைதிகள் டெனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா அதிபர் புடின் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் உள்ள இரண்டு மாகாணங்களை தனி மக்கள் குடியரசு நாடாக அறிவித்து இருந்தார். உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான இந்தப் பகுதிகளில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவிற்கு ஆரவான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளை விடுவிக்கும் முயற்சிகளுக்காகத்தான் உக்ரைன் தற்போது நேட்டாவின் ஆதரவை நாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.