மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது 75 நாட்களும் நான் அப்பல்லோ சென்றேன். இருப்பினும் ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. சசிகலா தவிர வேறு யாரும் சந்தித்ததாக நான் கேள்விப்படவும் இல்லை

75 நாட்கள் தொடர்ந்து அப்பல்லோ சென்றாலும் என்னால் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்பதை நினைத்து நினைத்து துர்ப்பாக்கியமாக உணர்ந்தேன். . அவரின் மரணச்செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன்.

அவரின் மரணம் குறித்து சந்தேகத்திற்குரிய கேள்வியை எழுப்ப என் மனம் ஒப்பவில்லை. நான் யாரையும் தவறாக குறிப்பிடவும் விரும்பவில்லை' என்று கூறினார்

More News

10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்...

மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது...

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது...

ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார்...