close
Choose your channels

மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது 75 நாட்களும் நான் அப்பல்லோ சென்றேன். இருப்பினும் ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. சசிகலா தவிர வேறு யாரும் சந்தித்ததாக நான் கேள்விப்படவும் இல்லை

75 நாட்கள் தொடர்ந்து அப்பல்லோ சென்றாலும் என்னால் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்பதை நினைத்து நினைத்து துர்ப்பாக்கியமாக உணர்ந்தேன். . அவரின் மரணச்செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன்.

அவரின் மரணம் குறித்து சந்தேகத்திற்குரிய கேள்வியை எழுப்ப என் மனம் ஒப்பவில்லை. நான் யாரையும் தவறாக குறிப்பிடவும் விரும்பவில்லை' என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.