எட்டு மணி நேரத்தில் முடிந்த 'காற்று வெளியிடை' பாடல்

  • IndiaGlitz, [Thursday,November 17 2016]

மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்புற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மாலை 4 மணிக்கு கூடி, 6 மணிக்கு மெட்டை இறுதி செய்து, பாட்டை 8 மணிக்கு உறுதி செய்து இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவை முடித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு
தொழிற்படுவது ஒரு தனி சுகம் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் பிரிவின் வலியை சொல்லும் பாடல் என்றும் இந்த பாடல்
“அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்”
என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

சிம்பு இயக்குனரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்

'இருமுகன்' வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரியுடன் இணைந்து சீயான் விக்ரம் 'சாமி 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்திய திரையுலகில் முதல்முறையாக ஃபர்ஸ்ட்லுக் ரிலீசுக்கு பிரமாண்டவிழா

ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஷங்கருடன் லைகா நிறுவனம் சேர்ந்தால் பிரமாண்டத்தின் எல்லையை வரையறுக்கவே முடியாது...

விஜய்க்கு கணக்கு தெரியவில்லை என தா.பாண்டியன் கூறியது சரியா?

பிரதமரின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நேற்று விஜய் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பு அடைய செய்துள்ளது...

மாதவன் - விஜய்சேதுபதி படத்தில் பாலா நாயகி

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தை

4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீர்த்திசுரேஷ்

பிரபல நடிகை மேனகாவின் மகளும் பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது...