close
Choose your channels

எட்டு மணி நேரத்தில் முடிந்த 'காற்று வெளியிடை' பாடல்

Thursday, November 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்புற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மாலை 4 மணிக்கு கூடி, 6 மணிக்கு மெட்டை இறுதி செய்து, பாட்டை 8 மணிக்கு உறுதி செய்து இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவை முடித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு
தொழிற்படுவது ஒரு தனி சுகம் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் பிரிவின் வலியை சொல்லும் பாடல் என்றும் இந்த பாடல்
“அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்”
என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.