இந்தியாவுக்கு ஆதரவு தர இங்கிலாந்து பறந்த த்ரிஷா-வரலட்சுமி


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியை நேரில் கண்டு ரசிக்க கோலிவுட் பிரபலங்கள் இங்கிலாந்து சென்று வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியை சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் நேரில் கண்டு ரசித்ததையும், இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதிய போட்டியை சரத்குமார்-ராதிகா ஆகியோர் நேரில் கண்டு ரசித்ததையும் செய்தியாக ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நாளை பிர்மிங்காம் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவது மட்டுமின்றி இங்கிலாந்தை தொடரில் இருந்து வெளியேற்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்துக்கு த்ரிஷா, வரலட்சுமி, பிந்துமாதவி ஆகியோர் நேரில் செல்கின்றனர். இங்கிலாந்து கிளம்புவதற்கு முன் விமான நிலையத்தில் இவர்கள் விமான நிலைய பெண் ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வரலட்சுமியின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments