வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடும் வரலட்சுமி: நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு திண்டாடி வருகின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் வாயில்லா ஜீவன்களான நாய் போன்ற விலங்குகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. நாய், மாடு உள்பட வீட்டு விலங்குகள் சாப்பாடு இன்றி வாடி வதங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை வரலட்சுமி ’மனிதர்களுக்கு மட்டுமின்றி முடிந்தால் நாய்களுக்கும் உணவு வைத்து உதவி செய்யுங்கள் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி அவரே விலங்குகளுக்கு தேவையான உணவுகளை வரவழைக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளார்

விலங்குகள் நல அமைப்புகளிடம் தொடர்பு கொண்டு தெருநாய்களுக்கு தேவையான உணவுகளை வரவழைத்து அவர் தனது கையாலே நாய்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் நாய்களுக்கு தேவையான உணவுகளை சப்ளை செய்த அனைத்து அமைப்புகளுக்கும் வரலட்சுமி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கொடுமையான கொரோனா நேரத்தில் மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து முடிந்த அளவு காப்பாற்றும் வரலட்சுமியின் சேவை நிச்சயம் பாராட்டுதலுக்குரியது
 

More News

ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்திருக்காங்க: ரேணிகுண்டா நடிகரின் வீடியோ

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்களாகத் தான் இருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தின் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில  நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

குற்றப்பரம்பரை கதையை படிக்கும் பிரபல இயக்குனர்: பாலா பாரதிராஜாவுக்கு போட்டியா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படமாக இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது