வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டாரா? புகைப்பட வைரலால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

கோலிவுட் திரையுலகில் தைரியமான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் நடிகை பாவனா கடத்தல் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனக்கு ஏற்பட்ட ஒரு பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தையும் வெளியே கொண்டு வந்தார். மேலும் 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் மூலம் திரையுலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்புக்கும் வழிவகை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வரலட்சுமி கடத்தப்பட்டதாக ஒரு செய்தியும், அவர் கட்டிலில் மேல் கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கும் ஒரு புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து வரலட்சுமி தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.
இந்த நிலையில் இந்த ஸ்டில் வரலட்சுமி நடித்து வரும் 'விக்ரம் வேதா' படத்தின் புரமோஷனாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் #VaralaxmiGotKidnapped என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருவதால் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் அரசியல் ஆலோசனை செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவின் 50 சக்திவாய்ந்த பட்டியலில் ரஜினி-கமல்

இந்தியா டுடே ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 நபர்களின் பட்டியல் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இதுதான் காஸ்ட்லி படம்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டாகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய்சேதுபதியை 'மாமனிதன்' ஆக்கிய யுவன்ஷங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளரும் இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுமான யுவன்சங்கர் ராஜா தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

மீண்டும் புதிய முதல்வர்? சென்னையில் குவியும் அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு

கடந்த சில நாட்களாக பிரேக்கிங் நியூஸ் இல்லாமல் நிம்மதியாக இருந்த தமிழக மக்களை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போது பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.