close
Choose your channels

தேர்தலில் போட்டியிடும் பிரபல தமிழ் நடிகருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

Wednesday, April 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி வந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததாக அறிவித்தார். ஆனால் அவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மன்சூர் அலிகானுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos