மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபரை மச்சினியின் காதலன் வெறித்தனமாக கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த குமாரசாமிக்கு சாமுண்டீஸ்வரி, பார்வதி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சாமுண்டேஸ்வரியை கடந்த சில ஆண்டுகளுக்கு துரைபாபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை

இந்த நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக துரைபாபு தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 19 வயது மனைவியின் தங்கையை பார்த்ததும் அவருக்கு காதல் வந்துவிட்டது ஏற்கனவே மனைவிக்கு 10 வருடம் குழந்தை இல்லாததால் மச்சினியை இரண்டாவதாக திருமணம் செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆசை வந்தது

ஆனால் அவரது மச்சினி பார்வதியோ பூவரசன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு மாமனார் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட துரைபாபு மச்சினிக்கு அறிவுரை கூறுவது போல், தன்னையே திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி தனது காதலன் பூவரசனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசன் நேராக பார்வதியின் வீட்டிற்கு வந்து துரைபாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து பூவரசன் தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக துரைபாபுவின் வயிற்றில் குத்தினார். தற்போது துரைபாபு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனாவால் உயரிழந்த உடல்களை நாய் திண்ணும் அவலம்!!! பகீர் தகவல்!!!

தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நடிகை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை சுஜா வருணி.

கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

குடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!!

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு உண்டு

லெபனான் விபத்து!!! மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!!

மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.