close
Choose your channels

மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபரை மச்சினியின் காதலன் வெறித்தனமாக கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த குமாரசாமிக்கு சாமுண்டீஸ்வரி, பார்வதி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சாமுண்டேஸ்வரியை கடந்த சில ஆண்டுகளுக்கு துரைபாபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை

இந்த நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக துரைபாபு தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 19 வயது மனைவியின் தங்கையை பார்த்ததும் அவருக்கு காதல் வந்துவிட்டது ஏற்கனவே மனைவிக்கு 10 வருடம் குழந்தை இல்லாததால் மச்சினியை இரண்டாவதாக திருமணம் செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆசை வந்தது

ஆனால் அவரது மச்சினி பார்வதியோ பூவரசன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு மாமனார் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட துரைபாபு மச்சினிக்கு அறிவுரை கூறுவது போல், தன்னையே திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி தனது காதலன் பூவரசனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசன் நேராக பார்வதியின் வீட்டிற்கு வந்து துரைபாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து பூவரசன் தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக துரைபாபுவின் வயிற்றில் குத்தினார். தற்போது துரைபாபு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.