“நாம் இருவர் நமக்கு ஆறுபேர்” வெனிசுலா அதிபரின் புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

 


“நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்“ என வளரும் நாடுகளில் புது வாசகம் சொல்லப் பட்டு வரும் நிலையில் வெனிசுலாவின் அதிபர் தன் நாட்டுப் பெண்கள் ஒவ்வொரும் 6 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் அதிபர் இப்படி பேசியிருப்பது அந்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வெனிசுலாவின் புதிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறார். பெண்கள் சுகாதார திட்டத்தை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் வெனிசுலாவின் ஒவ்வொரு பெண்களும் தலா ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் நன்மையைக் கருதி பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார். மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப் பட இருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு உலகம் முழுவதிலும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

வெனிசுலாவில் மொத்த மக்கள் தொகையில் 13% பேர் குழந்தைகள். 2013 – 2018 ஆம் ஆண்டுகளில் வெனிசுலாவில் குழந்தைகள் கடும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டதாக ஐ.நா. வின் Unisef குறிப்பிட்டு இருக்கிறது. அந்நாட்டில் கடுமையான அரசியல் எதிர்ப்புணர்ச்சி நிலவி வரும் சூழலில் அதிபரின் கருத்து மேலும், பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்நாட்டின் தேசிய சட்ட மன்ற உறுப்பினர் மானுவேலா, “நாட்டில் மருத்துவ மனைகள் சரியாகச் செயல்பட வில்லை, தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது. பெண்கள் ஊட்டச் சத்து குறைபாட்டால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் கட்டாய இடப்பெயர்வினை எதிர்க் கொண்டு வருகினறனர். உளவியல் சிக்கல் உள்ள ஒருவரால் தான் இப்படி பேச முடியும்” எனக் கடுமையாக விமர்சித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

எனக்கு பெரும் ஏமாற்றம்; மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? சுதா கொங்காரா மாஸ்டர் பிளான் 

'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பீதி: கஸ்தூரி படப்பிடிப்பில் பரபரப்பு 

நடிகை கஸ்தூரி நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஐடி நிறுவனம் திடீரென கொரொனா வைரஸ் பீதி காரணமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பா ரஞ்சித்-ஆர்யா படத்தில் வில்லனாகும் தமிழ் பட ஹீரோ

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெற்றிமாறனின் அடுத்த பட கதை இதுதான்

இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுப்பவர் என்பது அனைவரும் தெரிந்ததே. மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப்' என்ற நாவலை 'விசாரணை'