வெங்கட்பிரபுவையே ஆச்சரியப்படுத்திய 'மங்காத்தா 2' படத்தின் அப்டேட்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ’மங்காத்தா’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ’மங்காத்தா 2’ படத்திற்கான கதை தயாராக இருக்கிறது என்றும் அஜித் எப்போது ஓகே சொன்னாலும் அந்த படத்தை தான் இயக்க தயார் என்றும் வெங்கட்பிரபு பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மங்காத்தா படத்தில் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து உருவாக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் விரைவில் ’மங்காத்தா 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஜித்தின் ரசிகர் ஒருவர் வெங்கட்பிரபு அவர்களிடன் ‘இது உண்மையா’ என கேட்டபோது வெங்கட் பிரபுவே ஆச்சர்யத்தில் மூழ்கினார். எனக்கே தெரியாமல் எப்படி ‘மங்காத்தா 2’ என அவர் கேட்டுள்ளது பெரும் காமெடியாக உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அடுத்த வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ஆசை நூறு வகை’ என்ற பாடலுக்கு ’மங்காத்தா’ படத்தின் காட்சிகளை எடிட் செய்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இரட்டை வேடங்களில் கார்த்தி? பரபரப்பு தகவல்

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது 

பெரும்பாலான மக்களின் உணவு பூச்சிகள்தான்… பதற வைக்கும் வடகொரியாவின் உண்மை முகம்!!!

வடகொரியாவில் இருந்து தப்பி பல நெருக்கடிக்குப்பின் நியூயார்க்கில் வாழ்ந்து வரும்

'பிக்பாஸ் 4' புதிய வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

அடித்தது ஜாக்பாட்…ஒரு லாட்டரியில் ரூ.20 கோடி வென்ற இந்தியர்!!!

ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் லாட்டரி குலுக்கல் என்பது மிகவும் வரவேற்பு கொண்ட ஒரு விஷயமாகப் பார்க்கப் படுகிறது. காரணம்

4 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட பலே கில்லாடிகள்!!! மோப்பம் பிடித்த போலீஸ்!!!

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா பகுதியில் 4 ஏக்கர் விளைநிலத்தில் கஞ்சா