close
Choose your channels

மீண்டும் இரட்டை வேடங்களில் கார்த்தி? பரபரப்பு தகவல்

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

நடிகர் கார்த்தி கடந்த 2011ம் ஆண்டு வெளியான ’சிறுத்தை’ என்ற திரைப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இயக்குனர் சிவா இயக்கிய இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் சிறுத்தை சிவா’ என்று அழைக்கப்படுகிரார்.

இந்த நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ’இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும், இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த படம் கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் ’சுல்தான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’சுல்தான்’ படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகும் நிலைக்கு வந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.