வெங்கட்பிரபுவின் அடுத்த 'சென்னை 28' இரண்டாம் பாகமா?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2015]

சூர்யா, நயன்தாரா நடித்த 'மாஸ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது அடுத்த படத்திற்காக ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் அவர் இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 28' படத்தில் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் ஆகியோர் மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நடிகர்கள் மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவதால் இந்த படம் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த படம் 'சென்னை 28' படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும், அதே நடிகர்களுடன் கூடிய முற்றிலும் வித்தியாசமான வேறு படம் என்றும் வெங்கட்பிரபு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்து இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

அருள்நிதி நடித்த 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக் படமான 'அகிரா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் முடித்துவிட்டதாகவும்...

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும்...

'எந்திரன் 2': அர்னால்ட் நிபந்தனையை ஷங்கர் ஏற்பாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த்,...

தேசிய விருது பெற்ற நடிகரின் நிச்சயதார்த்த தேதி

பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்...

ரஜினி-விஜய் படங்களின் வியாபாரம் தொடக்கம்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றாலே வியாபாரம் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 17 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் 'படையப்பா'...