'த்ரிஷ்யம் 2' ரீமேக் குறித்த தகவல்: ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க ஜீத்துஜோசப் திட்டம்!

  • IndiaGlitz, [Saturday,February 20 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'த்ரிஷ்யம் 2’ படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்ய கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் உள்ள தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதல் முதலாக முந்திக் கொண்டது தெலுங்கு திரை உலகம் தான்.

'த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த வெங்கடேஷ் மீண்டும் 'த்ரிஷ்யம் 2’ படத்திலும் நடிக்க உள்ளார். இதனை படக்குழுவினர் உறுதி செய்ததோடு, இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் 'த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்த படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசனிடம் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 

More News

10 நாளுக்கு முன் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்து இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய தமிழ் நடிகை!

கடந்த 10 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்து அந்த குழந்தையின் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தமிழ் நடிகை ஒருவர் ஆரம்பித்துள்ளார் 

நீ லாஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னியே: கொளுத்தி போட்ட ஹர்பஜன்சிங்!

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன்சிங் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து தமிழர்களை குஷிப்படுத்துவார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை

ரஜினியை திடீரென சந்தித்த கமல்: சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கேட்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் அவர் ஆன்மீக ஆட்சியை தமிழகத்தில் நடத்துவார்

'இரு உனக்கு பாம் வைக்குறேன்': ஷிவானி பதிலுக்கு பாலாவின் ரியாக்சன்

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் 'காதல் கண்ணை மறைக்கிறது என்று ஆரியே விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களது

'உனக்கென்ன மேலே நின்றாய்': காலத்தால் அழியாத எஸ்பிபியின் பாடல்!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரக்கணக்கான பாடல்கள் மறக்க முடியாத, காலத்தால் அழிக்க முடியாத, காவிய பாடல்கள் என்றாலும் ஒரு சில பாடல்கள் மனதை விட்டு என்றுமே