close
Choose your channels

'உனக்கென்ன மேலே நின்றாய்': காலத்தால் அழியாத எஸ்பிபியின் பாடல்!

Saturday, February 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரக்கணக்கான பாடல்கள் மறக்க முடியாத, காலத்தால் அழிக்க முடியாத, காவிய பாடல்கள் என்றாலும் ஒரு சில பாடல்கள் மனதை விட்டு என்றுமே நீங்காத பாடல்களாக இருக்கும்.

அந்த வகையில் கமல்ஹாசன் நடித்த ’சிம்லா ஸ்பெஷல்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’உனக்கென்ன மேலே நின்றாய்’ என்ற பாடல் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான போதிலும் இன்றுவரை அந்த பாடல் இசை ரசிகர்களின் மறக்கமுடியாத பாடலாக உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி பாடல் வரிகளில் எஸ்பிபி குரலில் உருவான இந்த பாடலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்பிபி மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய வீடியோவும் யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காவிய பாடலை மீண்டும் ஒருமுறை மெய்மறந்து கேட்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.