நீண்ட இடைவெளிக்கு விஜய்சேதுபதி படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் பிரபலம்.. வைரல் புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி படத்தில் பாடல் ஒன்றை பிரபல பாடகர் ஒருவர் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் உதித் நாராயணன் என்பதும் இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ’டிஎஸ்பி’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடலை உதித் நாராயணன் உடன் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். உதித் நாராயணன் அவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அறிமுக பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது.
விஜய்சேதுபதி, அனு கீர்த்திதாஸ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார் என்பதும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments