close
Choose your channels

வெற்றிமாறனின் முக்கிய திரைப்படம் டிராப்பா?

Monday, November 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருந்த முக்கிய திரைப்படம் ஒன்று டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுவது திரை உலகில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது என்பதும், சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது. ’அதிகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதாகவும் நயன்தாராவின் 81வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ’அதிகாரம்’ படம் டிராப் ஆகிவிட்டது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.