தமிழ் இயக்குனர் என்னிடம் தவறாக நடந்தார்: வித்யாபாலன்

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

நடிகை வித்யாபாலன் தமிழகத்தை பூர்விகமாக கொண்டிருந்ததாலும் தமிழ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறந்த அவர் சமீபத்தில் தான் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டரில் மட்டுமே நடித்தார்.

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் தான் தமிழ் படத்தில் நடிக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தன்னை புறக்கணித்ததாகவும் குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தனது முகத்தோற்றத்தை கேவலமாக பேசி அவமானப்படுத்தியதாகவும், அந்த தயாரிப்பாளரை தன்னால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் தன்னிடம் ஒரு தமிழ் பட இயக்குனர் தவறாக நடக்க முயற்சி செய்ததாக அவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார். தான் சென்னையில் இருந்த போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க தன்னிடம் ஒரு இயக்குனர் அணுகியதாகவும், அந்த இயக்குனர் அவருடைய அறைக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையில் இருப்பதிலேயே குறியாக இருந்ததாகவும், ஆனால் தான் அறைக்கு சென்றதும் கதவை திறந்து வைத்ததால் ஐந்து நிமிடத்தில் அவர் கிளம்பி விட்டதாகவும் கூறினார். தமிழ் பட இயக்குனர் ஒருவர் மீது வித்யாபாலன் கூறிய இந்த குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

More News

தெருக்கூத்து டாஸ்க்கில் சொதப்பிய லாஸ்லியா? சாண்டியை தள்ளிவிட்டதால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று பொம்மலாட்டம் கலையை பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பாக செய்து காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில் இன்று தெருக்கூத்து கலையை

இன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்!

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே போல் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்களின்

'நம்ம வீட்டு பிள்ளை' மைலாஞ்சி பாடல் குறித்த தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மைலாஞ்சி'

இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர்

பிரபல பின்னணி பாடகர்களான எஸ்பிபி, கேஜே ஜேசுதஸ் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இளம் பின்னணி பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர்தான் பாடகர் அஜீஸ்

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.