close
Choose your channels

தமிழ் இயக்குனர் என்னிடம் தவறாக நடந்தார்: வித்யாபாலன்

Wednesday, August 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வித்யாபாலன் தமிழகத்தை பூர்விகமாக கொண்டிருந்ததாலும் தமிழ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறந்த அவர் சமீபத்தில் தான் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டரில் மட்டுமே நடித்தார்.

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் தான் தமிழ் படத்தில் நடிக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தன்னை புறக்கணித்ததாகவும் குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தனது முகத்தோற்றத்தை கேவலமாக பேசி அவமானப்படுத்தியதாகவும், அந்த தயாரிப்பாளரை தன்னால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் தன்னிடம் ஒரு தமிழ் பட இயக்குனர் தவறாக நடக்க முயற்சி செய்ததாக அவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார். தான் சென்னையில் இருந்த போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க தன்னிடம் ஒரு இயக்குனர் அணுகியதாகவும், அந்த இயக்குனர் அவருடைய அறைக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையில் இருப்பதிலேயே குறியாக இருந்ததாகவும், ஆனால் தான் அறைக்கு சென்றதும் கதவை திறந்து வைத்ததால் ஐந்து நிமிடத்தில் அவர் கிளம்பி விட்டதாகவும் கூறினார். தமிழ் பட இயக்குனர் ஒருவர் மீது வித்யாபாலன் கூறிய இந்த குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.