நன்றி தங்கமே! விக்னேஷ் சிவனின் பிறந்த நாளில் நயன்தாரா!

  • IndiaGlitz, [Saturday,September 18 2021]

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நயன்தாரா ஆச்சரியமான பரிசளித்ததை அடுத்து ‘நன்றி தங்கமே’ என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது காதலருக்கு ஆச்சரியப்படும் வகையில் பரிசினை அளித்து ஆச்சரியமளித்துள்ளார்.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நன்றி தங்கமே! என் வாழ்க்கையில் நீ என்னுடன் இருப்பதற்கும் உன்னுடைய இந்த சர்ப்ரைஸ் வருகைக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்!

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி

திருநங்கைகள் துவங்கிய “டிரான்ஸ் கிச்சன்“… பொதுமக்கள் அமோக வரவேற்பு!

திருநங்கைகள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக உணவகம் ஒன்றைத்  துவங்கியுள்ளனர்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்… பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

நேற்று பெய்த கனமழையால் புதுக்கோட்டை அருகேயுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மழைநீர் தேங்கியுள்ளது

மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்!

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த நீட் தேர்வின் அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்