பிக்பாஸூக்கு நன்றி கூறிய இயக்குனர் விக்னேஷ்சிவன்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,September 19 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு செல்பவர்கள் யார் யார்? என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் பிக்பாஸூக்கு பிரபல இயக்குனர் விக்னேஷ்சிவன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் ஏன் நன்றி தெரிவித்தார் என்பதை பார்ப்போம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு நடிகை நயனதாரா உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான மகத், தனது சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மகத்தின் இந்த டுவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஷ்சிவன், 'நன்றி பிக்பாஸ்' என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் கசப்பான அனுபவங்களை பெற்று மக்களின் வெறுப்புக்கும் காதலி பிராய்ச்சியின் அதிருப்திக்கும் ஆளான மகத், பிக்பாஸ் நிகழ்ச்சியையே மறக்கும் நிலையில் உள்ளார். ஆனால் அவரையே பிக்பாஸ் ஆக்கி விக்னேஷ்சிவன் கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சர்கார்' கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பு இதுதான்

;தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இன்றுமுதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

எல்லோரும் என்னை டார்கெட் பண்றிங்க: ஐஸ்வர்யா ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் கடுமையாக உள்ளது. உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

பரட்டை,சப்பாணியை விரட்டியடிப்பார் இளையதளபதி: திமுக எம்.எல்.ஏ

அதிமுக அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர் படம்

எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்த 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' திரைப்படம் தற்போது அனிமேஷனில் தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

'இரும்புத்திரை' இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்

சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் செய்யப்படும் மோசடி குறித்து பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருந்தது