close
Choose your channels

பிக்பாஸூக்கு நன்றி கூறிய இயக்குனர் விக்னேஷ்சிவன்: ஏன் தெரியுமா?

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு செல்பவர்கள் யார் யார்? என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் பிக்பாஸூக்கு பிரபல இயக்குனர் விக்னேஷ்சிவன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் ஏன் நன்றி தெரிவித்தார் என்பதை பார்ப்போம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு நடிகை நயனதாரா உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான மகத், தனது சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மகத்தின் இந்த டுவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஷ்சிவன், 'நன்றி பிக்பாஸ்' என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் கசப்பான அனுபவங்களை பெற்று மக்களின் வெறுப்புக்கும் காதலி பிராய்ச்சியின் அதிருப்திக்கும் ஆளான மகத், பிக்பாஸ் நிகழ்ச்சியையே மறக்கும் நிலையில் உள்ளார். ஆனால் அவரையே பிக்பாஸ் ஆக்கி விக்னேஷ்சிவன் கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.