close
Choose your channels

'பீஸ்ட்' படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: நிஜமானது வடிவேலு காமெடி!

Thursday, April 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தியேட்டரில் விஜய்யின் 'பீஸ்ட்’ படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு வடிவேல் காமெடி நிஜமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரு திரையரங்கில் ‘பீஸ்ட்’ படம் திரையிடப்பட்டது.

முதல் பாதி முடிந்தது இடைவேளைக்கு பின் இரண்டாவது பாதி படம் தொடங்கியபோது விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் இரண்டாம் பாதி ‘பீஸ்ட்’ படத்திற்கு பதிலாக ’ஆர்.ஆர்.ஆர்.’ படம் திரையிடப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் கூச்சலிட்டு ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாதியை போடுங்கள் என கூறிய பின்னர் தான், திரையரங்க நிர்வாகம் சுதாரித்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை நிறுத்திவிட்டு ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் பாதியை திரையிட்டது. இதனால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சரத்குமார், நயன்தாரா நடித்த ’ஐயா’ படத்தில் வடிவேலுவின் தியேட்டரில் ரஜினியின் ‘அருணாச்சலம்’ படம் ஓடிக் கொண்டிருக்கும் போது கடைசி ரீல்பெட்டியை குரங்கு தூக்கி சென்றுவிட்டதால் வேறு வழியில்லாமல் வடிவேலு ’பாட்ஷா’ படத்தின் கிளைமாக்ஸ் போட சொல்வார். இந்த காமெடி நேற்று நிஜமாகவே நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.