எஸ்.ஏ.சி தொடர்ந்த வழக்கு: விஜய் பட தயாரிப்பாளருக்கு சிறை!

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய், ஸ்ரேயா நடிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ் மகன். இந்த படத்தை சுவர்க சித்ரா அப்பச்சன் என்பவர் தயாரித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன், விஜய்யின் தந்தையிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று திரும்பி தராமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது

இந்த புகார் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியான நிலையில் ’பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

பாஜகவில் இணைந்தார் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட ஒரு சில திரைப்படங்களின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ என்பது தெரிந்ததே.

வருத்தப்பட்ட ரியோவின் மனைவி: வைரலாகும் டுவீட்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷனில்: யாரை யார் யார் நாமினேட் செய்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

சொன்னபடியே கெத்தா ஜெயிக்க வச்சிட்டார் பாலாஜி! அர்ச்சனா குரூப் அப்செட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ விடியோவில் தோல்வி அடைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைப்பது தான் கெத்து என்று பாலாஜி கூறியது குறித்து பார்த்தோம்.