இந்தி படத்திற்கு பயன்படுத்தப்படும் தளபதியின் சூப்பர் ஹிட் பாடல்

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' இன்று வெளிநாடுகளிலும் நாளை தமிழகம் உள்பட இந்தியாவிலும் பிரமாண்டமாக சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தடைகள் பல கடந்து வெளியாகும் இந்த படம் வசூலில் புதிய சாதனை நிகழ்த்த காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை இந்தியில் தயாரிக்கப்படும் படம் ஒன்றுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆம், சந்தோஷ் நாராயணன் இசையில் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற 'வர்லாம் வர்லாம் வா' என்ற பாடல் எந்த அளவுக்கு ஹிட் என்பதை சொல்லவே தேவையில்லை. அருண்காமராஜ் பாடிய இந்த பாடல் தற்போது பாலிவுட்டில் தயாராகி வரும் 'கோல்மால் அகெய்ன்' (Golmaal Again) என்ற படத்திற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வர்லாம் வர்லாம் வா பாடலை தமிழிலேயே பயன்படுத்தப்படவுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகும்போது இந்த பாடலுக்காகவே விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிப்படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய இசையுலகில் அனிருத்தின் முதல் முயற்சி

ராக் ஸ்டார் அனிருத் நேற்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், பிறந்த நாளில் மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அனிருத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலுங்கு மாநில விஜய் ரசிகர்களுக்கு ஒருநாள் சோகம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வெற்றிகரமாக வரும் தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கடைசி தடையும் நீங்கியது: மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை ஆகியவற்றை கடந்து வந்த நிலையில் கடைசியாக விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பிரச்சனையையும் சந்தித்தது

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.

இளைஞர்களின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்

இசைஞானிக்கு ஒரு 'அன்னக்கிளி', ஆஸ்கார் நாயகருக்கு ஒரு 'ரோஜா', அதுபோல் ராக்ஸ்டார் அனிருத்துக்கு ஒரு '3'.