வெற்றி பெற்ற மறுநாளே மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் மக்கள் பணியை தொடங்கி உள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெற்றி பெறும்வரை வேட்பாளர்கள் மக்களிடம் ஓட்டுக்காக கெஞ்சிக் கொண்டு இருப்பார்கள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு அவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் வெற்றி பெற்ற மறுநாளே பதவியேற்கும் முன்பே தனது மக்கள் பணியை தொடங்கி விட்டார்

வேலூர் மாவட்டம் தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் அந்த பகுதி மக்களின் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ளார். தனது சொந்த செலவில் அவர் இந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை அடுத்து அவருக்கு அந்த பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

இதேபோல் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் 110 கவுன்சிலர்களும் மக்கள் பணியை தொடர்ந்து செய்தால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் அந்த அமைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

நயன்தாராவுக்கு உதவும் வெங்கட்பிரபு: நாளை செம விருந்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக கருதப்படுகிறது. 

யாஷிகா குறித்து முதல்முறையாக  மனம் திறந்த நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களும் தங்களுடைய சொந்த கதை, சோக கதையை கடந்த சில நாட்களாக தெரிவித்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலானவர்களின் கதைகள் உருக்கமாகவும்,

2ஆம் பாகமாகும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்: அதே இயக்குனர் அதே தயாரிப்பாளர்?

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்

வெள்ளேந்தியான தாமரை செல்வியிடம் இவ்வளவு திறமையா? இணையத்தில் வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய தாமரைச்செல்வியின் நாடக நடனம் குறித்த வீடியோக்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு

இன்று 'அரண்மனை 3' ரிலீஸ்: சுந்தர் சி, உதயநிதிக்கு டுவிட் செய்த ஆர்யா!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'அரண்மனை 3' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.