close
Choose your channels

சாத்தான்குளம் சம்பவம் போல் எங்களுக்கு நடந்துவிடும்: விஜய் கட்சி தலைவர் மனைவி அச்சம்!

Friday, November 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தான்குளம் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாக விஜய் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விஜய் மக்கள் மன்றம் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கினார். இந்த கட்சியின் தலைவர் பத்மநாபன் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் பத்மநாபன் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் புகாரை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பத்மநாபன் திடீரென தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் பத்மநாபன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து விசாரணை செய்ய அவரது மனைவி, மைத்துனர் மற்றும் மாமனாரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பத்மநாதனின் மனைவியை மட்டும் விடுவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்மநாபன் மனைவி வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’என் கணவர், தம்பி மற்றும் தந்தை மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லை. ஆனால் திடீரென போலீசார் என் தந்தையையும் தம்பியையும் அடித்து இழுத்துச் சென்றனர். என்னையும் அழைத்துச் சென்றனர். ஆனால் என்னை மட்டும் சிறிய விசாரணைக்கு பின்னர் விடுவித்து விட்டனர்

என் தந்தையும் தம்பியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றங்கள் விடுமுறையில் உள்ள நேரத்தில் திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. எனவே தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவாளர் பத்மநாபனை விஜய் தனது மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.