ஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகையர் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் உள்ளனர் என்பதும் சமூக வலைதளங்கள் மூலம் அவர்கள் தங்கள் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் போன்ற பெரிய நடிகர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து தளபதி விஜய் இன்னும் ஒரு சில நாட்களில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அவர்களின் மகள் சினேகாவுக்கும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் என்பவருக்கும் சென்னை சாந்தோம் சர்ச்சில் வரும் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரும் ஐபிஎல் பெங்களூரு ராயல் சேலஞ்ச் கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான யுஜ்வேந்திர சாஹல் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம்

கேரளா-இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு!!! இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த சில வாரங்களுக்கு 10வது இடத்திற்கு இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி

பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை

கேரள மாநில விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ்குமார் என்பவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும்

கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன? அமிதாப் பரபரப்பு டுவீட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்