மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-அசோக்செல்வன்

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் ஏற்கனவே ’சூதுகவ்வும்’ மற்றும் ’ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் ’ஓ மை கடவுளே’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜன் அவர்களும் சமீபத்தில் இணைந்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை தான் அணுகியதாகவும் தன்னுடைய கேரக்டர் மற்றும் படத்தின் கதையை கேட்ட விஜய்சேதுபதி உடனே ஒப்புக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்து நடித்துக் கொடுத்ததாகவும் இயக்குனர் அஸ்வத் கூறினார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், அவரது காட்சிகள் சமீபத்தில் மணிமஹாலில் படமாக்கப்பட்டது என்றும் இயக்குனர் மேலும் தெரிவித்தார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாகவும், விரைவில் பாடல் வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் இயக்குனராக தெரிவித்தார்.
 

More News

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல்

அசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிய 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் யோகிபாபு

வைகைப்புயல் வடிவேலு நடித்து வந்த 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் பிரச்சனையின் காரணமாக நின்று போனதை அடுத்து அவருக்கு கோலிவுட் திரையுலகில் வேறு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

நான் ஒரு ராணி, உலகை எப்படி ஆள்வது என்பது எனக்கு தெரியும்: ஐஸ்வர்யா தத்தா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ரித்விகாவை விட இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தாவுக்கு தான் கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது 

மோடி, ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் பாணியில் இருந்து விலகிய கமல்

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில்