close
Choose your channels

நான் 'அரண்மனை 4' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம்: சுந்தர் சி

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை வெளியான ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களிலும் இரண்டு முக்கிய நடிகர்கள் நடித்த நிலையில் ’அரண்மனை’ படத்தை நான்காம் பாகத்தில் ஒரே ஒரு ஹீரோ மட்டும் தான் இருந்தார் என்பதும் அந்த வேடத்தில் நான் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம் என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் இறுதியில் சுந்தர் சி பேசினார்.

அப்போது ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்களில் இரண்டு ஹீரோக்கள் இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு ஹீரோ கேரக்டர் மட்டுமே இருந்தது. அந்த கேரக்டரிலும் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அவரது தேதி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் நான் நடித்தேன் என்று கூறினார்.

அதேபோல் இந்த படத்தில் தமன்னாவின் கேரக்டர் மிகவும் சவாலானது என்றும் அதை அவர் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார் என்றும் மிகவும் எமோஷனலான ஒரு குழந்தைக்கு தாய் கேரக்டரில் தமன்னா நடித்துள்ளார் என்றும் இந்த படத்தில் வித்தியாசமான தமன்னாவை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

’அரண்மனை’ படத்தின் முதல் பாகத்தில் சுந்தர் சி, வினய் ஆகியோர்களும் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி, சித்தார்த் ஆகியோர்களும் மூன்றாம் பாகத்தில் சுந்தர் சி, ஆர்யா ஆகியோர்களும் நடித்த நிலையில் நான்காம் பாகத்தில் சுந்தர் சி மட்டுமே முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.