தமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் என்று முத்தையா முரளிதரன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்

இந்த அறிக்கைக்கு ’நன்றி வணக்கம்’ என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். சமீபத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் தாயார் மறைவை அடுத்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறுவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. இருப்பினும் ’800’ பட விவகாரம் குறித்து விஜய் சேதுபதி முதல்வரிடம் பேசி இருப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் ‘800’ பட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய்சேதுபதி, ’நன்றி வணக்கம்’ என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்றும் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

More News

பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'பேய் மாமா' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, 'பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார் 

பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'பேய் மாமா' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, 'பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார் 

800 படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய்சேதுபதி? அவரே அளித்த விளக்கம்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என  நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டமாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விலகி கொள்ளுங்கள் விஜய்சேதுபதி: முரளிதரன் கடிதத்திற்கு மக்கள் செல்வனின் பதில்!

தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றை எழுதி நிலையில் அந்த கடிதத்துக்கு 'நன்றி வணக்கம்' என விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார் 

வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,