கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. சிறுமியை சீரழித்த மனித மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கோலிவுட் திரையுலகினர்களும் இதுகுறித்து தங்களுடைய ஆத்திரங்களை கொட்டி தீர்த்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி, 'ஒரு பெண்ணுக்கு இந்த கொடூரம் நடந்தாலே தாங்க முடியாது. அந்த குழந்தை எப்படி தாங்கும். குற்றவாளிகளை கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது. உட்கார்ந்து பேசி கொண்டிருக்க நேரமில்லை. உடனே தண்டனை வேண்டும், அதுவும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பயம் இருக்கும்.

பெண்கள் தான் இந்த பூமிக்கு சொந்தமானவர்கள். அவர்களால் தான் இந்த பூமியே அழகாக உள்ளது. பெண் குழந்தைகளும் பெண்களும் தெய்வத்திற்கு சமம். இந்த கொடூர குற்றம் செய்தவர்களை உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பது சரியல்ல, தள்ளி போடாமல் உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

More News

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்குக் கார்த்தி அதிரடி பதில்

நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல கார்த்தி

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிரபுதேவாவின் முதல் போலீஸ் பட டைட்டிலில் போலீஸ் அதிகாரி

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே நடந்து வந்தது.

பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் நான்: விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பும், அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரும் படிப்படியாக ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் அவரது 25வது படமான 'சீதக்காதி'

மாதம் ரூ.450 சம்பாதித்த நடிகரின் இன்றைய வருமானம் ரூ.850 கோடி! யார் அவர்?

மாதம் ஒன்றுக்கு வெறும் ரூ.450 மட்டுமே சம்பளமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெற்று வந்த நடிகர் ஒருவரின் இன்றைய வருமானம் வருடத்திற்கு ரூ.850 கோடி என்றால் நம்ப முடிகிறதா?