close
Choose your channels

கல்வி விருது விழாவில் 'அசுரன்' பட வசனத்தை பேசிய விஜய்..!

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்யின் கல்வி விருது விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் தளபதி விஜய் சற்றுமுன் பேச தொடங்கினார். அதில் அவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தின் வசனத்தை பேசியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் பேசிய விஜய் ’படிப்பை மட்டும் உங்ககிட்ட இருந்து எடுத்துக்க முடியாது என்ற வசனம் என்னை ரொம்ப பாதித்த வசனம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அதற்கான நேரம் இதுதான் என்று கல்வி விழாவில் பேசினார்.

மேலும் மாணவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும். பாட புத்தகங்களை தாண்டி மாணவர்கள் பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று விஜய் அறிவுரை கூறினார்.

மேலும் நாளைய வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோரிடம் பணம் வாங்காமல் வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் நடிகர் விஜய் பேசினார்.

மேலும் சமூக வலைதளங்களில் வரும் அனைத்தையும் நம்பாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அவர், இதுவரை சினிமா நடிப்பு என்று என் பயணம் இருந்தது, இனிமேல் ஒருவேளை.. என்று தொடங்கிய விஜய், ‘சரி விடுங்க இப்ப எதுக்கு’ என விஜய் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.