சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரனில் இணைந்த இன்னொரு ஹீரோ

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளதாகவும், அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் 'சென்னை 60028' உள்பட பல படங்களில் நடித்தவரும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அச்சமின்றி' படத்தின் ஹீரோவுமான விஜய் வசந்த் இணைந்துள்ளார். ஒருசில ஊடகங்கள் விஜய் வசந்த் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றார் என்று கூறுவதில் உண்மையில்லை என்றும், சிவகார்த்திகேயனின் நண்பராக விஜய்வசந்த் நடித்து வருவதாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

More News

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடித்த 'போகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வெற்றி பட வரிசையில் இணைந்துள்ள நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'வனமகன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்ப்பு முடிந்தது என்பதை பார்த்தோம்...

தீபாவின் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக நேற்றே கூறினார்...

'கபாலி' படம் நஷ்டம் என்பது உண்மையா? விளக்குகிறார் மதுரை திரையரங்கு உரிமையாளர்

பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உள்பட பெரிய ஸ்டார்களின் பல படங்கள் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாகவும், ஆனால் அந்த படங்கள் 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் ஓடியதாக பொய்யான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் பேசினார்...

10 வருடங்களுக்கு முன்பே பாவனாவின் கொடுமையை அனுபவித்த பிரபல பெண் இயக்குனர்

பிரபல நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பாவனா தைரியமாக முன்வந்து போலீஸ் புகார் கொடுத்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்...

ஓபிஎஸ் அணியில் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற போட்டியின் காரணமாக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரண்டு அணிகளாக பிரிந்தன...