close
Choose your channels

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு.

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சென்னையில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மற்றொரு டாக்டரும் இன்று உயிரிழந்த நிலையில் அவரை அடக்கம் செய்யவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போலீசாரால் இன்று 20 பேர் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மனித நேயத்துடன் விஜயகாந்த் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos