பரபரப்பான உண்மை சம்பவ கதையில் விக்ரம்பிரபு!
- IndiaGlitz, [Friday,February 22 2019]
விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துப்பாக்கி முனை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'அசுரகுரு' மற்றும் 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு பரபரப்பான உண்மைச்சம்பவத்தை அடிப்ப்டையாக வைத்து உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழரசன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகனாக விக்ரம்பிரபு நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கி வரும் 'மான்ஸ்டர்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது